பெருநகரத்தின் தனிமை, வாட்டி வதைக்கும் வறுமை, உடலை உருக்கும் தீராத நோய்... இவற்றுக்கு நடுவே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வாழ முடியும்?
தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் வடித்தெடுத்த ஆகச்சிறந்த காவியம் 'செல்லம்மாள்'. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, மின்சார வசதி கூட இல்லாத ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் பிரமநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் எதார்த்தமான வாழ்க்கைப் பயணம் இது.
ஆர்ப்பாட்டமோ, கவர்ச்சியோ இல்லாத, தியாகமும் அசாத்திய புரிதலும் மட்டுமே நிறைந்த ஒரு 'காமமற்ற தூய காதலை' இதில் நீங்கள் உணரலாம். திருநெல்வேலி வட்டார வழக்கின் அழகோடும், சென்னையின் அன்றாட எதார்த்தங்களோடும் புதுமைப்பித்தன் தன் பேனாவால் செதுக்கியிருக்கும் இந்த மனித உணர்வுகளின் உன்னதக் கதை, கேட்பவர் நெஞ்சை நிச்சயம் கனக்கச் செய்யும்.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Deepika Arun. Innehållet i podden är skapat av Deepika Arun och inte av,
eller tillsammans med, Poddtoppen.