வரலாற்றில் இன்று தூத்துக்குடி இராமநாதபுரம் பேரழிவை சந்தித்த நாள். (23-11-1956 மற்றும் 23-11-1964) (தூத்துக்குடி ரயில் மற்றும் இராமேஷ்வரம் ரயில்) தமிழகத்தில் 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலால் தனுஷ்கோடி நகரம் அழிந்தது மட்டுமில்லை, அன்றைக்கு சென்னை-பாம்பனிலிருந்து தனுஷ்கோடிக்கு சென்ற போர்ட் மெயில் விரைவு ரயில் வண்டியில் பயணித்தவர்கள் ஜலசமாதி அடைந்த வேதனையான செய்திகள் எல்லாம் கேட்க முடிந்தது. இந்த சம்பவம் நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அதுபோன்று, இதே நாளில் 64 ஆண்டுகளுக்கு முன்னால், 250 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ரயில் விபத்து இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த விபத்துக்கு, நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, பிரதமர் நேரு தடுத்தும், 1956 நவம்பர் காலகட்டத்தில் பதவி விலகினார். அரியலூரில் 23-11-1956 அன்று இந்த விபத்து நடந்தது.
Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör
Kadal Pura. Innehållet i podden är skapat av Kadal Pura och inte av,
eller tillsammans med, Poddtoppen.